பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகே வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், பேருந்துகளில் அதிக ஒலியுள்ள காற்று ஒலிப்பான்களை (ஏர்ஹாரன்) செவ்வாய்க்கிழமை மாலை சோதனை செய்து அகற்றினர்.
பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கிட்டரமணி உத்தரவின்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கண்ணன், சுகந்தி ஆகியோர் பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் அவ்வழியாகச் சென்ற 50 க்கும் மேற்பட்ட தனியார், அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்து, பேருந்துகளில் பயன்படுத்திய அதிக ஒலியுள்ள காற்று ஒலிப்பான்களை (ஏர்ஹாரன்) அகற்றினர். பேருந்துகளில் மீண்டும் பொருத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.