கஸ்பாபேட்டை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தியையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜயந்தியன்று சிறப்பு பூஜைகள், அலங்காரம், வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வசுதேவர் கிருஷ்ணரை தாங்கி வரும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இந்த அலங்காரத்தில் வரும் மூன்று தினங்களுக்கு அருள்பாலிப்பார் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.