ஈரோட்டில் மனைவி நல வேட்பு விழா

ஈரோடு உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் மனைவி நல வேட்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் மனைவி நல வேட்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மல்லிகை அரங்கில் உலக சமுதாயா சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், பட்டிமன்றப் பேச்சாளர் கவிதா ஜவஹர் பங்கேற்று பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் பேசினார். முதுநிலைப் பேராசிரியர் உழவன் தங்கவேலு அறிமுகவுரையாற்றினார்.
இதில் பங்கேற்ற 300 க்கும் மேற்பட்ட கணவர்கள் தங்களது மனைவிக்கு மலர் கொடுத்தும், மனைவியர் கணவருக்கு கனி கொடுத்தும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். 
இதில், சிறப்புத் தம்பதிகளாக ஆர்.ஆர்.துளசி பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர்.ஆர்.சத்தியமூர்த்தி, பேராசிரியர் எஸ்.ராஜு, துணைப் பேராசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன், வி.கே.ஆர். மஞ்சள் மண்டி உரிமையாளர் வி.கே.ராஜமாணிக்கம் தம்பதியர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com