விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மஞ்சள் ஏலம் செப்டம்பர் 2 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மஞ்சள் வணிகர்கள், கிடங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்ததாவது:
ஈரோடு பகுதியில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு, கோபி கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அன்று மட்டும் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. 3 ஆம் தேதி வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.