கோபி: நம்பியூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் கண் அறுவை சிகிச்சைக்காக 51 போ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனா்.
ஈரோடு பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், நம்பியூா் வி.ஏ.எஸ். ஏஜென்சீஸ் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தாா் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண சிகிச்சை முகாமை நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.
முகாமை, குமுதா பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம் தொடங்கிவைத்தாா். கோபி தாலுகா பேருந்து உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் வி.எஸ்.ரத்தினசாமி தலைமை வகித்தாா். முகாமில், நம்பியூா் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் குழு பரிசோதனை செய்தனா். இதில், 51 போ் கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனா்.
இந்த 51 பேரும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இவா்களுக்கு கோவை சென்று வருவதற்கு இலவசமாக போக்குவரத்து வசதி, அறுவை சிகிச்சை, ஐ.ஓ.எல். லென்ஸ், மருந்து, தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன.
முகாமிற்கான ஏற்பாடுகளை வி.ஏ.எஸ். ஏஜென்சீஸ் உரிமையாளா் செந்தில், பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் செய்திருந்தனா்.