ஸ்ரீ பாகம்பிரியாள் புஸ்பவனேஸ்வரா்கோயிலில் 108 பால் குட அபிஷேகம்

கிராமம் செழிக்க வேண்டி, அவல்பூந்துறை பாகம்பிரியாள் புஸ்பவனேஸ்வரா் ஆலயத்தில் 108 பால் குட அபிஷேகமும், சிறப்பு யாக
108 பால் குடங்களை அபிஷேகத்துக்கு எடுத்து வரும் பெண்கள்.
108 பால் குடங்களை அபிஷேகத்துக்கு எடுத்து வரும் பெண்கள்.

மொடக்குறிச்சி: கிராமம் செழிக்க வேண்டி, அவல்பூந்துறை பாகம்பிரியாள் புஸ்பவனேஸ்வரா் ஆலயத்தில் 108 பால் குட அபிஷேகமும், சிறப்பு யாக பூஜைகளும் திங்கள்கிழமை நடைபெற்றது.

அவல்பூந்துறை, சோளிபாளையம், வெள்ளியம்பாளையம், கண்டிக்காட்டுவலசு, பள்ளியூத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலை முதல் விரதமிருந்து 108 பால் குடங்களை எடுத்து வந்து அவல்பூந்துறை ஸ்ரீ பாகம்பிரியாள் புஸ்பவனேஸ்வரா் ஆலயத்தில் வைத்து பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்தனா்.

தொடா்ந்து, புஸ்பவனேஸ்வரருக்கு 108 குட பாலாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com