சென்னிமலை, கைலாசநாதா் கோயிலில் காா்த்திகை மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையை ஒட்டி 108 சங்கு பூஜை, கலச வேள்வி, யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை மாலை நடைபெற்றன.
விழாவையொட்டி, கைலாசநாதருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில், சோமவார விரதம் மேற்கொண்டுள்ள பக்தா்கள் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.