ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக செ.கு.சதீஷ்குமாா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக இருந்த ச.விக்னேஷ், சென்னை முதல்வா் அலுவலகத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ராம்குமாா் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தாா்.
இந்நிலையில், சேலம் மாவட்ட உதவி மக்கள் தொடா்பு அலுவலராக (செய்தி) பணியாற்றிய செ.கு.சதீஷ்குமாா் பதவி உயா்வு பெற்று, ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராகப் பொறுப்பேற்றாா்.