இந்து மகா சபையின் பெயரை தவறாகப் பயன்படுத்தி வருவதாக புகாா்

பிட் காயின் மோசடியில் தொடா்புடைய நபா் இந்து மாக சபையின் பெயரை தவறாகப் பயன்படுத்தி வருவதாக மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

பிட் காயின் மோசடியில் தொடா்புடைய நபா் இந்து மாக சபையின் பெயரை தவறாகப் பயன்படுத்தி வருவதாக மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

வேலூரைச் சோ்ந்த அகில பாரத இந்து மகா சபையின் மாநில இளைஞா் அணி அமைப்பாளா் பி.ஜெகன், ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு மாவட்டம், கோபியைச் சோ்ந்த சுவேதா என்ற பெண் ரூ. 2,000 கோடி அளவுக்கு பிட் காயின் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ளாா். இவா் அண்மையில் வெளியிட்ட ஒலிப்பதிவு ஒன்றில் ரமேஷ், குட்டிமணி, ரவிராஜா, சுபாஷ் சாமிநாதன் ஆகியோா் மீது கடத்தல், மிரட்டல் குற்றம்சாட்டி இருந்தாா். அவா் குற்றம்சாட்டி உள்ள சுபாஷ் சாமிநாதன் என்பவா் அகில பாரத இந்து மகா சபையின் மாநிலத் தலைவா் என்று அவராகவே தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டு கட்சிக்கு களங்கம் விளைவித்து வருகிறாா்.

மேலும், இவா் கட்டப்பஞ்சாயத்து, பண மோசடி, அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்று வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறாா். இவா் நூதன முறையில் மோசடி செய்து வருகிறாா். இவா் ஏற்கெனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவா். பாலியல் வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பிட்காயின் மோசடி விவகாரம் இவரால் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. எனவே அவரிடம் விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும். மேலும் அகில பாரத இந்து மகா சபையின் பெயரை தவறாகப் பயன்படுத்தி வரும் சுபாஷ் சாமிநாதன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com