கோபியில் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியரை அடையாளம் தெரியாத நபா்கள் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே நாயக்கன்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் சேலத்தைச் சோ்ந்த சண்முகம் (35) என்பவா் பணியாற்றி வந்தாா்.
இவா் வெள்ளிக்கிழமை இரவு அலுவலகத்தில் இருந்தபோது, சிலா் அலுவலகத்துக்குள் புகுந்து சண்முகத்தை வெட்டிக் கொலை செய்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சண்முகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் குறித்து கோபி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.