இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி சாவு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார். 


பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார். 
பெருந்துறை - ஈரோடு சாலை, பசுமை நகரைச் சேர்ந்த நவமணி மனைவி பழனியம்மாள் (60). இவர், பெருந்துறை - ஈரோடு சாலையில், கந்தாம்பாளையம் பிரிவு அருகே வியாழக்கிழமை மாலை சாலையைக் கடந்தபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்தார். பின்னர், பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தார். 
இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com