பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நம்பியூர் அருகே கோசணம் ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து
கொண்டு பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி பேசினார். விழாவில், கோசணம் ஊராட்சி செயலாளர் செல்வம், கூட்டுறவு வங்கித் தலைவர் பொன்னுசாமி, உபதலைவர் மணி, சேரன்சரவணன்,
கருப்பண கவுண்டர், கங்காதரன் பிரபு, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.