பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
பெருந்துறையை அடுத்த, சங்கு நகரைச் சேர்ந்தவர் நாகராஜன் (63). இவர், பெருந்துறையை அடுத்த சீனாபுரம் அருகே சைக்கிளில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம், சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயடைந்த நாகராஜன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் புதன்கிழமை உயிரிழந்தார். பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.