திருவள்ளுவர் பிறந்த தினத்தையொட்டி, அவரது சிலைக்கு ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு, சூரம்பட்டி நான்கு ரோடு அருகில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆசிரியர் பிரிவின் தலைவர் சுந்தரநாரயணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியன் பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதில், கோட்ட பொறுப்பாளர் வே. வைரவேல், மாநிலப் பிரசார பிரிவு பொறுப்பாளர் ஈரோடு சரவணன், மாநில வழக்குரைஞர் பிரிவு பொறுப்பாளர் என்.பி. பழனிசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் பொன். ராஜேஷ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் குரு.குணசேகரன், மகேஸ்வரன் , மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், சூரம்பட்டி மண்டல் தலைவர் சின்னதுரை உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.