அம்மாபேட்டை அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பவானியை அடுத்த சின்னபருவாச்சி, பட்டக்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் குருசாமி மகன் நாகராஜ் (55). மக்காச்சோள வியாபாரி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் அம்மாபேட்டை - அந்தியூர் சாலையில் பூதப்பாடி அருகே வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே வந்த டிப்பர் லாரி, இருசக்கர வாகனத்தின் மோதியதில் படுகாயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.