சாலை விபத்தில் வியாபாரி பலி

அம்மாபேட்டை அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 

அம்மாபேட்டை அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 
பவானியை அடுத்த சின்னபருவாச்சி, பட்டக்காரர் தோட்டத்தைச் சேர்ந்தவர் குருசாமி மகன் நாகராஜ் (55). மக்காச்சோள வியாபாரி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் அம்மாபேட்டை - அந்தியூர் சாலையில் பூதப்பாடி அருகே வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தார். 
அப்போது, அவ்வழியே வந்த டிப்பர் லாரி, இருசக்கர வாகனத்தின் மோதியதில் படுகாயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com