ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர்-ஆ கிராமம், மஜரா தேவர்மலை சமுதாயக் கூடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் புதன்கிழமை (ஜூன்19) காலை 11 மணிக்கு மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது.
இதில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.