கோவை மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணைய அலுவலகங்களில் உதவியாளர் பணி நியமனத்துக்கு நேர்முக தேர்வு ஈரோட்டில் வரும் 24 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்), சென்னிமலை சாலை, அரசு ஐடிஐ பின்புறம், மகாராஜா திரையரங்கம் அருகில், ஈரோடு என்ற முகவரியில் மேற்கண்ட நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேர்முக தேர்வு நடைபெறுகிறது.
தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு, அஞ்சல் மூலம் நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தங்களது புகைப்படத்துடன் கூடிய கடிதத்தில், அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாதது குறித்து தெரிவித்து, இரண்டாம் படி அழைப்பு கடிதத்தை பெறலாம்.
இதனை ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் வரும் 22ஆம் தேதி முதல் நேரில் அணுகி பெறலாம். நேர்முக தேர்வுக்கு அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, உதவி ஆவணமாக ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல், நகலுடன் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.