சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.
கொடுமுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 196 மூட்டைளில் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் நிலக்கடலை கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.62.51க்கும், குறைந்தபட்சமாக ரூ53.69க்கும், சராசரி விலையாக ரூ.59.72க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்து 841க்கு நிலக்கடலை விற்பனை நடைபெற்றது.