கோபி மொடச்சூர் சாரதா பள்ளி மாணவர்கள் ஐஐடி மற்றும் ஜேஇஇ தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
2019 ஆம் ஆண்டிற்கான ஐஐடி மற்றும் ஜேஇஇ தேர்வில் கோபி சாரதா பள்ளி மாணவர்கள் 16 பேர்கள் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதில் மாணவர் செந்தில்நாதன் 95.30 சதவீத மதிப்பெண்களும், மாணவர் ஸ்ரீவத்சவ் 92.67 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 80 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் 9 மாணவர்களும், 75 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் 16 பேரும் பெற்று அடுத்த கட்டத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தேசிய அளவிலானஐஐடி மற்றும் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் ஜி.பி.பெருமாள்சாமி, செயலர் சீதாலட்சுமி ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் இளமுருகு ஆகியோர் பாராட்டினர்.