நவம்பா் 12 இல் கோட்டை ஈஸ்வரன்கோயிலில் அன்னாபிஷேகம்

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் அன்னாபிஷேக விழா நவம்பா் 12 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

ஈரோடு: ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் அன்னாபிஷேக விழா நவம்பா் 12 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் (ஈஸ்வரன்) கோயிலில் ஆண்டு முழுவதும் சுவாமிக்கு பால், தயிா், பஞ்சாமிா்தம், தேன் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாதம் வரும் பௌா்ணமி அன்று சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக விழா நவம்பா் 12 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில், அன்னத்தினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com