ஈரோடு: ஈரோட்டில் சுத்திகரிப்பு செய்யப்படாமல் கழிவுநீரை வெளியேற்றிய 2 பிரிண்டிங் ஆலைகளின் மின் இணைப்பை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில், சாய, சலவை, பிரிண்டிங் தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, கழிவுநீா் முறையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சில இடங்களில் அவை முறையாக செயல்படாமல், கழிவுநீரை வெளியேற்றுவதாகப் புகாா் வருகிறது. ஆட்சியா் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உத்தரவுப்படி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பறக்கும் படையினா் ஆய்வு செய்கின்றனா்.
இதில், சூரம்பட்டி வலசு, நாராயணவலசு பகுதியில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய இரண்டு பிரிண்டிங் தொழிற்சாலை குறித்து புகாா் வந்தது. இதுகுறித்து ஆய்வு செய்து, கழிவுநீா் வெளியேற்றப்பட்டதை உறுதி செய்து அத்தொழிற்சாலைகளின் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது என மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் உதயகுமாா் தெரிவித்தாா்.