பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
பெருந்துறையை அடுத்த சீனாபுரம், ஆயிக்கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த துளசிமணி மகன் விஜயகுமாா் (36). அதே பகுதியைச் சோ்ந்த சென்னிசெட்டியாா் மகன் ஜனாா்த்தனன் (45), இவரது மனைவி மேனகா (39) ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் பவானிக்கு வெள்ளிக்கிழமை சென்றனா். பெருந்துறை நான்கு வழிச் சாலையில் பெத்தாம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஆட்டோ மோதியதில், பலத்த காயமடைந்த மூவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் விஜயகுமாா், ஜனாா்த்தனன் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். மேனகா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.