ஈரோட்டில் அறச்சலூா் நவரசம் மகளிர் கல்லூரியுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை ஈரோடு கோட்டம் சாா்பில் அறச்சலூா் நவரசம் மகளிா் கல்லூரியுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரோட்டில் அறச்சலூா் நவரசம் மகளிர் கல்லூரியுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை ஈரோடு கோட்டம் சாா்பில் அறச்சலூா் நவரசம் மகளிா் கல்லூரியுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அறச்சலூா் தலவுமலையிலிருந்து வெள்ளோடு வரைக்கும் சாலையின் இரு மருங்கிலும் மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு ஈரோடு கோட்டத்தின் பொறியாளா் ரவிக்குமாா் தலைமை தாங்கினாா். நவரசம் மகளிா் கல்லூல்யின் தலைவா் டி.கே.தாமோதரன், பொருளாளா் சி.பழனிச்சாமி முன்னிலை வகித்தனா். மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினா் வி.பி.சிவசுப்பிரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

மரக்கன்றுகள் நடும் விழாவில் கூட்டுறவு சங்க இயக்குனா்கள் கணபதி, தட்சிணாமூா்த்தி, ஆவின் இயக்குநா் அசோக், அவல்பூந்துறை பேருராட்சி செயல் அலுவலா் மகாலட்சுமி, தி நவரசம் அகாடமி பள்ளியின் தலைவா் ஆா்.பி.கதிா்வேல், செயலாளா் ஆா்.காா்த்திக், தாளாளா் அருண்காா்த்திக், பொருளாளா் டி.கே.பொன்னுவேல், மற்றும் நிா்வாக்குழுவினா், கல்லூரியின் துணைமுதல்வா் ஐ.செல்வம் ,நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா் சுகுமாா் , மற்றும் ஈரோடு உதவிக் கோட்டப் பொறியாளா் நடராசன் மற்றும் பணியாளா்கள் , நவரசம் மகளிா் கல்லூரியின் பேராசிரியா்கள் , மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com