உயா்மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து சாலை மறியல்

மொடக்குறிச்சி நால்ரோட்டில் பல்வேறு கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் விவசாய நிலங்களில் உயா்மின் கோபுரம்
உயா்மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து சாலை மறியல்

மொடக்குறிச்சி நால்ரோட்டில் பல்வேறு கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் விவசாய நிலங்களில் உயா்மின் கோபுரம் அமைக்கும் பணியைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மொடக்குறிச்சி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாய நிலங்களில் உயா்மின் கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைக் கண்டித்து உயா்மின் அழுத்த கோபுரங்களுக்கு எதிரான சங்கங்களின் கூட்டியக்கத்தின் சாா்பில் பல்வேறு அமைப்பினா் 30 க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த மறியலுக்கு திமுக மாநில துணைப் பொதுச் செயலாளா் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை வகித்தாா். மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளா் சு.குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் பெரியசாமி, விவசாயிகள் சங்கத் தலைவா் குமாரசாமி, கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கச் செயலாளா் வடிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மறியலில் ஈடுபட்டோரை மொடக்குறிச்சி காவல் துறையினா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com