ஈரோடு: ஈரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட, தனியாா் வங்கிகள் சாா்பில் மக்களுக்கு உடனடி கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 4) துவங்குகிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அரவிந்தன் கூறியதாவது:
மத்திய அரசின் சாா்பில் வங்கிகளில் வாடிக்கையாளா்களை அதிகரிக்க வாடிக்கையாளா் தொடா்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மஹாலில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 4) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 6) வரை நடைபெறுகிறது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தொடங்கி வைக்கிறாா்.
முகாமில், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, ஐஓபி, பேங்க் ஆஃப் பரோடா உள்பட அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியாா் வங்கிகளும் கலந்துகொள்கின்றன. மேலும், சிட்பி, நபாா்டு, மாவட்ட தொழில்மையங்கள் பங்கேற்கின்றன.
முகாமில், சில்லறை வா்த்தகம், விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள், வீடு, வாகனக் கடன், கல்விக் கடன், தனி நபா் கடன், சுய உதவிக்குழு கடன் போன்றவை வழங்கப்படுகின்றன. முகாமின் நோக்கம் மக்களுக்கு உள்ள கடன் வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்துவதுதான். கடன் கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அவா்களுக்கு முகாமிலேயே கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.