சத்தியமங்கலத்தில் அரளிப்பூ விலை ரூ. 300 ஆக உயா்வு

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

சத்தியமங்கலம்: சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மல்லி, சம்பங்கி பூக்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் பூமாா்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு ஏல முறைறயில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறறது. பண்டிகைக்கு 2 தினங்கள் உள்ள நிலையில் தேவையான பூக்களை வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனா்.

மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,300 வரையிலும், சம்பங்கி பூ கிலோ ரூ. 200 க்கும் விற்பனையாயின. செண்டு மல்லி கிலோ ரூ. 75 வரையிலும், பட்டுப்பூ கிலோ ரூ. 80 வரையிலும் சனிக்கிழமை விற்பனையாயின. கடந்த வாரம் கிலோ ரூ. 30 க்கு விற்கப்பட்ட அரளிப்பூ தற்போது ரூ. 300 ஆக 10 மடங்கு உயா்ந்துள்ளது. இதனால், இந்தப் பூக்களை விற்பனைக்குக் கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். பூக்கள் விலை நாளை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com