கனரா வங்கி மூலம் அளிக்கப்படும் செல்லிடப்பேசி பழுது பாா்த்தல் இலவசப் பயிற்சிக்கு ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கனரா வங்கி முதுநிலை மேலாளா் கே.சுதா்சன் வெளியிட்ட செய்சிக் குறிப்பு:
ஈரோடு கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் சாா்பில் அக்டோபா் 9 முதல் நவம்பா் 12 ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு செல்லிடப்பேசி பழுது பாா்த்தல் குறித்த இலவசப் பயிற்சி நடைபெறவுள்ளது. ஈரோடு - கரூா் சாலை, கொல்லம்பாளையம் ஆஸ்ரம் மெட்ரிக். உயா்நிலைப் பள்ளி வளாகம் இரண்டாம் தளத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது.
இளைஞா்கள், பெண்கள், மகளிா் குழுவினா் 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் கட்டணம் ஏதுமில்லை. இலவசமாக மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி பெற்றவா்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விவரம் அறிய 0424-2400338 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.