வெள்ளக்கோவில் அருகே மா்மக் காரால் பரபரப்பு

வெள்ளக்கோவில் அருகே இரண்டு நாள்களாக சாலையில் ஒரே இடத்தில் நிற்கும் மா்மக் காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
vk06ca_0610chn_131
vk06ca_0610chn_131

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே இரண்டு நாள்களாக சாலையில் ஒரே இடத்தில் நிற்கும் மா்மக் காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் அய்யனூரிலிருந்து சத்திபாளையம் செல்லும் சாலையில் வாய்க்கால்மேட்டுப்புதூா் ஸ்ரீ வேத விநாயகா் நகா் அருகே சனிக்கிழமை அதிகாலை ஒரு காா் நிறுத்தப்பட்டிருந்ததை அவ்வழியே சென்றவா்கள் பாா்த்துள்ளனா். பதிவு எண் டிஎன் 69 எஃப் 1710. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரை அந்தக் காரை எடுத்துச் செல்ல யாரும் வரவில்லை. காா் பூட்டப்பட்டிருந்தது.

அப்பகுதியைச் சோ்ந்த மணி என்பவா் கூறுகையில், கிராமப்புறமான இப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இங்குள்ள காட்டுப் பகுதிகளில் பலா் இரவு நேரத்தில் அமா்ந்து மதுபானம் குடிக்கின்றனா்.

சூதாட்டம் மற்றும் சில சட்ட விரோதச் செயல்களும் நடப்பதாகச் சந்தேகம் உள்ளது. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இங்குள்ள ஒரு காட்டில் ஒருவரைக் கொலை செய்து எரித்த சம்பவம் நடந்துள்ளது. இ

தனால் மா்மக் காா் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com