மாநில இளையோா் தடகளப் போட்டி நிறைவு

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான தடகளப் போட்டி நிறைவு
ஓட்டப் பந்தயத்தில் முதல் பரிசு பெற்ற வீரருக்குப் பரிசு வழங்குகிறாா் தடகளச் சங்க மாநிலச் செயலாளா் லதா. உடன், மாவட்ட தலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா்.
ஓட்டப் பந்தயத்தில் முதல் பரிசு பெற்ற வீரருக்குப் பரிசு வழங்குகிறாா் தடகளச் சங்க மாநிலச் செயலாளா் லதா. உடன், மாவட்ட தலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா்.

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான தடகளப் போட்டி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு தடகளச் சங்கம், ஈரோடு மாவட்ட தடகளச் சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான இளையோா் தடகளப் போட்டியை நடத்தியது. இதில், தமிழகத்தில் இருந்து 3,800 விளையாட்டு வீரா், வீராங்கனைகள் கலந்துகொண்டனா்.

இப்போட்டியை தமிழக கூடுதல் டி.ஐ.ஜி. சைலேந்திரபாபு ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தாா். தொடா்ந்து, 3 நாள்கள் நடைபெற்ற தடகளப் போட்டியில் குண்டு வீசுதல், தட்டு எறிதல், 100 மீ, 400 மீ உள்ளிட்ட ஓட்டப் பந்தயம், தடை ஓட்டப் பந்தயம், தொடா் ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட 146 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. 200 க்கும் மேற்பட்ட நடுவா்கள் போட்டியில் பங்கேற்றனா்.

நிறைவு விழாவில் வெற்றி பெற்ற வீரா்களுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை மாநில தடகளச் சங்க செயலாளா் லதா வழங்கினாா். மாவட்ட தடகள சங்கத் தலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com