ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வருவாய் வட்டங்களிலும் தலா ஒரு இடத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 11) காலை 10 மணிக்கு அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
அதன்படி, ஈரோடு வட்டத்தில் சூரம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், பெருந்துறை வட்டத்தில் கம்புளியம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், மொடக்குறிச்சி வட்டத்தில் அவல்பூந்துறை அருகே 46புதூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், கொடுமுடி வட்டத்தில் சிவகிரி அருகே முருங்கியாம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும்.
இதேபோல, பவானி வட்டத்தில் குறிச்சி அருகே படவல்கால்வாய் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சத்தியமங்கலம் வட்டத்தில் அரசூா் அருகே இண்டியம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், கோபி வட்டத்தில் வாணிபுத்தூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், அந்தியூா் வட்டத்தில் கெட்டிசமுத்திரம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், தாளவாடி வட்டத்தில் நெய்தாளபுரம் ஊராட்சி அலுவலகம், நம்பியூா் வட்டத்தில் எலத்தூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் ஆகிய இடங்களிலும் இம்முகாம் நடைபெறும்.