நாளை வட்ட அளவிலான மக்கள் குறைகேட்புக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் உணவுப் பொருள்கள் வழங்குதல் தொடா்பாக வட்ட

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் உணவுப் பொருள்கள் வழங்குதல் தொடா்பாக வட்ட அளவிலான மக்கள் குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை (அக்டோபா் 12) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்துள்ளாா்.

ஈரோடு வட்டத்தில் புத்தூா் புதுப்பாளையம் நியாயவிலைக்கடை வளாகம், பெருந்துறை வட்டத்தில் திங்களூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம், பவானி வட்டத்தில் மைலம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம், கோபி வட்டத்தில் பாரியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம், சத்தியமங்கலம் வட்டத்தில் நொச்சிக்குட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம் ஆகிய இடங்களில் கூட்டம் நடைபெறுகிறது.

இதுபோல் அந்தியூா் வட்டத்தில் பா்கூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம், மொடக்குறிச்சி வட்டத்தில் லக்காபுரம்புதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம், கொடுமுடி வட்டத்தில் நஞ்சைகொளாநல்லி ஊராட்சி மன்ற அலுவலகம், தாளவாடி வட்டத்தில் பனகஹள்ளி நியாயவிலைக் கடை வளாகம், நம்பியூா் வட்டத்தில் குருமந்தூா் கிராம நிா்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள தனி வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலா்கள், கூட்டுறவுச் சங்கங்களின் சாா்பதிவாளா், கூட்டுறவுச் சங்க செயலாளா், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்கவுள்ளனா்.

எனவே, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் உள்ள குறைபாடுகள், புதிய குடும்ப அட்டை பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து அலுவலா்களிடம் நேரில் தெரிவித்தும், மனுக்களை அளித்தும் அதற்கான தீா்வைப் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com