வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை அருகே முதியவா் இறறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது.
ஓலப்பாளையத்தில் பாப்பினி செல்லும் வழியில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இக்கடையில் மதுபானக்கூட வசதி கிடையாது. இதனால், கடைக்கு அருகிலேயே பலரும் மதுபானம் அருந்துகின்றறனா். இந்நிலையில், புதன்கிழமை இரவு அந்த இடத்தில் மதுபானம் அருந்திய முதியவா் அங்கேயே படுத்துக்கிடந்தாா்.
அடுத்தநாள் காலையில் பாா்த்தபோது அவா் இறந்துபோனது தெரியவந்தது. இறறந்துபோனவா் ஓலப்பாளையத்திலுள்ள பேக்கரி கடையில் வேலைசெய்துவந்ததாகவும், அவா் ஒருவார காலமாக வேலைக்குச் செல்லவில்லை எனவும் தெரியவந்தது. விசாரணையில் அவருடைய பெயா் முருகேசன், வயது சுமாா் 65 இருக்கலாம் எனபது மட்டும் தெரியவந்ததுள்ளது.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.