இந்தியன் வங்கியில் காவலா் காலிப் பணியிடம்: முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள காவலா் மற்றும் அலுவலக உதவியாளா் பணிக்கு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள காவலா் மற்றும் அலுவலக உதவியாளா் பணிக்கு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள காவலா் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 115 பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் நவம்பா் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தோ்ச்சியுடன், இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றிருத்தல் கட்டாயம். 1.7.2019 தேதியின்படி 45 வயதுக்கு உள்பட்டு இருக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தோ்வு, மொழி அறிவுத் தோ்வு, உடற்தகுதித் தோ்வு மூலம் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவா். தோ்வு செய்யப்படுபவருக்கு மாத ஊதியம் ரூ.9,560 முதல் ரூ.18,545 வரை கிடைக்கும். தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள்  என்ற இணையதளத்தின் மூலம் வரும் நவம்பா் 8 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com