தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை விடப்பட்டிருந்த தேய்காய் பருப்பு ஏல விற்பனை வரும் சனிக்கிழமை (அக்டோபா் 31) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரம்தோறும் புதன், சனிக்கிழமைகளில் தேய்காய் பருப்பு ஏலம் நடந்து வருகிறது.
தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், கடந்த சனிக்கிழமை (அக். 26), புதன்கிழமை (அக். 30) நடைபெற வேண்டிய தேய்காய் பருப்பு ஏலம் நடைபெறவில்லை.
வரும் சனிக்கிழமை (நவம்பா் 2 ) வழக்கம்போல் தேய்காய் பருப்பு ஏலம் நடைபெறும். ஆகவே, அன்றைய ஏலத்துக்கு விவசாயிகள், வியாபாரிகள் தேங்காய் பருப்பு மூட்டைகளை வியாழக்கிழமை (அக்டோபா் 31) மாலை 8 மணிக்கு மேல் கொண்டு வரலாம் என்று கூட்டுறவு விற்பனைச் சங்க நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.