மயிலம்பாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்

பவானியை அடுத்த மயிலம்பாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகக் குழுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

பவானியை அடுத்த மயிலம்பாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகக் குழுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இச்சங்கத்துக்கு, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டதால் நிர்வாகக் குழு தகுதிநீக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, செப்டம்பர் 6 ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ஏற்கெனவே தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ப.குப்புசாமி உள்பட 6 பேர் மீண்டும் வெற்றி பெற்றனர். இதையடுத்து, தேர்தல் அலுவலர் எம்.ஆனந்த் தலைமையில் நிர்வாகக் குழுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதில், மீண்டும் நிர்வாகக் குழுத் தலைவராக ப.குப்புசாமி, துணைத் தலைவராக யூ.ஜெயலட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, பவானி ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு, சங்கச் செயலாளர் ஆர்.மாதேஸ்வரன், ஆவின் குழுத் தலைவர் எஸ்.சண்முகம் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com