செல்லியாண்டியம்மன் கோயிலில் சங்காபிஷேக வழிபாடு

பவானி செல்லியாண்டியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா, 108 சங்காபிஷேக வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 

பவானி செல்லியாண்டியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா, 108 சங்காபிஷேக வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 
இக்கோயில் கும்பாபிஷேகம் நிறைவுபெற்று 13 ஆம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு  108 வலம்புரி சங்குகளைக் கொண்டு மூல மந்திர ஹோமம், மங்கல திரவிய ஹோமம், தீபாராதனை செய்யப்பட்டன. தொடர்ந்து, பல்வேறு திரவியங்களைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேக வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக, கணபதி பூஜை, சங்கல்பம், கலச பூஜைகள் நடத்தப்பட்டன.
ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.எஸ்.பழனிசாமி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், தொழிலதிபர்கள் அக்னி ராஜா, பிரபாத் மகேந்திரன், சங்கமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com