தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் தீவு ஆகிய பகுதிகளின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் 6 ஆவது கிளஸ்டர் தடகளப் போட்டிகள் கோவை கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டியில், 60 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில், பெருந்துறை, சாகர் இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் ஸ்ரீசஞ்சீவ், அஷ்வின், ஹரிஹரஸ்ரீராம், ஜெயபிரசாத் ஆகியோர் 17 வயதுக்கு உள்பட்ட பிரிவில் 400 தொடர் ஓட்டப் போட்டியில் 3 ஆவது இடமும், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் மாணவர் ஸ்ரீசஞ்சீவ் 3 ஆவது இடமும் பெற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளித் தாளாளர் சி.செளந்திரராசன், முதல்வர் ராதா மனோகரன், மூத்த முதல்வர் கல்யாணராமன், ஆசிரியர்கள் பாராட்டினர்.