ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநராக கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் எஸ்.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். வங்கியின் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதிக கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களை உள்ளடக்கிய நல்ல லாபத்தில் இயங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதல் பதிவாளர் நிலை அதிகாரிகளை மேலாண்மை இயக்குநராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் ஈரோடு, கோவை, சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதல் பதிவாளர்கள் நிலை அதிகாரிகள் மேலாண்மை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநராக கூடுதல் பதிவாளர் எஸ்.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் (சட்டம், பயிற்சி) இணைப் பதிவாளராகப் பணிபுரிந்து, இப்போது கூடுதல் பதிவாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.