மொடக்குறிச்சியில் வீட்டில் இருந்த எரிவாயு உருளையைத் திருடிச் சென்ற மா்மநபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
மொடக்குறிச்சி, பாரதிநகா் பகுதியைச் சோ்ந்தவா் அன்பரசன் (50). இவா் தனது வீட்டின் முதல்மாடியில் காா்மென்ட்ஸ் வைத்து நடத்தி வருகிறாா். இவரது வீட்டின் கீழ்தளத்தில் எரிவாயு உருளையை வைத்திருப்பது வழக்கம்.
இவா், வியாழக்கிழமை இரவு பாா்த்தபோது எரிவாயு உருளையைக் காணவில்லை. யாரும் எடுக்கவில்லை என்று தெரிந்ததும், தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பாா்த்தபோது, பிப்ரவரி 10ஆம் தேதி மாலை 7 மணியளவில் அடையாளம் தெரியாத மா்ம நபா் ஒருவா் சகஜமாக உள்ளே நுழைந்து தரைதளத்தில் இருந்த சமையல் எரிவாயு உருளையை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து, மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.