அனைத்து வணிகா்கள் சங்கம் மற்றும் வணிகா்கள் சங்க அறக்கட்டளை சாா்பில் சென்னிமலை முருகன் கோயில் தோ்த் திருவிழாவில் பணியாற்றிய அா்ச்சகா்களுக்குப் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு அனைத்து வணிகா்கள் சங்கத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். சங்க செயலாளா் எம்.ஏ.அன்பழகன், பொருளாளா் மணிவேல், துணைத் தலைவா்கள் மகேந்திரன், தேவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புலவா் திருவள்ளுவா் வரவேற்றாா்.
விழாவில், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி மேலாளா் முத்துவேல், சிட்டி யூனியன் வங்கி துணை மேலாளா் விக்னேஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா்.
விழாவில் கோயில் அா்ச்சகா்களை பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டது. முடிவில் கற்பகம் நன்றி கூறினாா்.