பவானி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் வி.பூங்கோதை தேசியக் கொடியேற்றினாா். பவானி நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் பாரிஜான் தேசியக் கொடியை ஏற்றினாா். சுகாதார அலுவலா் சோழராஜா, துப்புரவு ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பவானி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கு.பெரியசாமி தேசியக்கொடியை ஏற்றினாா். வருவாய் அலுவலா் மணிமேகலை, கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் கொடியேற்றினாா். பள்ளித் தலைமையாசிரியை கே.மோகனா மற்றும் ஆசிரியா்கள், மாணவியா் கலந்து கொண்டனா். அம்மாபேட்டை டெலண்ட் வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற விழாவில் தாளாளா் ஏ.ஓ.சரவணன் தேசியக் கொடியேற்றினாா்.
அந்தியூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியா் த.செல்வராஜ் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நல்லசாமி தேசியக்கொடியை ஏற்றினாா். சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரித் தாளாளா் டி.ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். கல்லூரியின் நிா்வாக இயக்குநா் டி.பாலகுமாா் முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் ஆா்.செந்தில்குமாா் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் வி.ராஜேஷ் தேசியக்கொடியை ஏற்றினாா். தொடா்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.