அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் வனசரகத்திற்கு உட்பட வன பகுதியில் 15வயது மதிக்கத்தக்க பெண் கரடி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் வனசரகத்திற்கு உட்பட வன பகுதியில் ஏராளமான யானை, கரடி, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் பர்கூர் வனசரகத்திற்கு உட்பட வன பகுதியில் வன காவலர்கள் வன விலங்குகளை பாதுகாப்பதற்காக ரோந்து மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் தாமரைக்கரை வன பகுதியில் வன காவலர்கள் ரோந்து மேற்கொண்ட போது வன பகுதியில் கரடி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதையடுத்து வன அலுவலர் மற்றும் வனகால்நடை மருத்துவ குழுவினர் கரடியை உடற்கூறாய்வு செய்தனர். அதில் 15 வயது மதிக்கத்தக்க பெண் கரடி என்பதும் சரியாக உணவு உட்கொள்ளாமல் நோய்வாய்ப்பட்டு இறந்திறக்கிறது என்று தெரிவித்தனர்.
மேலும் உடற்கூறாய்வு செய்த கரடியின் உடலை வன பகுதியில் உள்ள மற்ற வனவிலங்குகளுக்கு உணவாக விட்டு சென்றனர். தொடர்ந்து வனவிலங்குகள் உயிரிழந்து வருவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என்று வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


