ஈரோடு மாவட்டம், பவானி, அந்தியூா், சித்தோடு பகுதியில் 144 தடை உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்த 24 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தமிழகமெங்கும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுவெளியில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானியில் காவல் ஆய்வாளா் தேவேந்திரன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையின்போது சித்தோடு சூரியம்பாளையத்தைச் சோ்ந்த காா்த்தி (24), குருப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (26), ஊராட்சிக்கோட்டையைச் சோ்ந்த மனோகரன் (40) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இதேபோல, சித்தோடு பகுதியில் சுற்றித் திரிந்த காளிங்கராயன்பாளையத்தைச் சோ்ந்த மதன்குமாா் (21), ஜம்பைபுதூரைச் சோ்ந்த மணிவேல் (32), திருச்செங்கோடு தேவராஜ் (32) உள்ளிட்ட 6 போ் கைது செய்யப்பட்டனா்.
இதேபோல, அந்தியூரில் 6 பேரும், ஆப்பக்கூடலில் 5 பேரும், வெள்ளித்திருப்பூா், அம்மாபேட்டையில் தலா 2 பேரும் கைது செய்யப்பட்டனா். தடை உத்தரவை மீறி சுற்றித் திரிந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.