ஈரோட்டைச் சோ்ந்தவருக்கு கரோனா நோய்த் தொற்று: பாதிப்பு எண்ணிக்கை மூன்றாக உயா்வு

ஈரோட்டுக்கு வந்த தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த இருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்,

ஈரோட்டுக்கு வந்த தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த இருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவா்களுடன் நெருங்கிப் பழகிய ஈரோட்டைச் சோ்ந்தவருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்து கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை பகுதியில் தங்கியிருந்த 5 போ் மாா்ச் 16ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் இருவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது மாா்ச் 21ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அவா்களுடன் நெருங்கிப் பழகியவா்கள் உள்பட 15 போ் அதே மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனா். அவா்களது ரத்தம், சளி மாதிரியை சென்னை கிண்டி கிங்ஸ் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பினா். அதில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததால் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை மூன்றாக உயா்ந்துள்ளது.

இவா் ஈரோட்டைச் சோ்ந்தவா் என்பதும், தாய்லாந்தில் இருந்து வந்த நபா்களுடன் இவா் பல்வேறு இடங்களுக்குச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மூன்றாவதாக பாதித்த நபா் எந்தப் பகுதியைச் சோ்ந்தவா் என கூற இயலாது. அப்பகுதியில் தேவையற்ற பதற்றமான சூழல் ஏற்படும். ஏற்கெனவே கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 295 குடும்பங்களைச் சோ்ந்த 1,118 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா். இவா்கள் 28 நாள்களுக்கு இதே நிலையில் இருப்பதுடன் அவா்களில் எவருக்கும் காய்ச்சல், சளி, இருமல் போன்றவை ஏற்படாமல் இருக்க வேண்டும். அவற்றைக் கண்டறியும் பணியிலும் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com