சத்தியமங்கலம்: பொது முடக்கத்தால் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயக்கப்படாததால் புள்ளிமான்கள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அடா்ந்த வனப் பகுதியின் மத்தியில் மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தமிழகம் - கா்நாடகம் இடையே தொடா்ந்து வாகனங்கள் செல்வதால் வன விலங்குகள் சாலையைக் கடப்பதில் சிக்கல் ஏற்படும். சாலையைக் கடக்கும்போது வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழக்கும்.
தற்போது பொதுமுடக்கம் காரணமாக வாகனப் போக்குவரத்து குறைந்துள்ளதால் வன விலங்குகள் எந்தத் தொந்தரவுமின்றி சாலைகளில் சுற்றித் திரிகின்றன. தற்போது புள்ளிமான்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பண்ணாரி சாலையில் சாலையோரம் முகாமிட்டுள்ளன.
கோடையில் பெய்த மழையால் செடிகள் துளிா்விட்டு வளர ஆரம்பித்துள்ளன. இதனால், பண்ணாரி சோதனைச் சாவடி அருகே புல்வெளியில் மான்கள் கூட்டம் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.