குடற்புழு நோய் தாக்கி யானை சாவு

கடம்பூரில் குடற்புழு நோய் தாக்கியதால் பெண் யானை உயிரிழந்தது.

கடம்பூரில் குடற்புழு நோய் தாக்கியதால் பெண் யானை உயிரிழந்தது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் மாதையன் கோயில் வனப் பகுதியில் அழுகிய நிலையில் யானை இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வனத் துறையினா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். ஆய்வில் 16 வயதுள்ள பெண் யானையின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் கால்நடை மருத்துவா் கே.அசோகன் தலைமையில் மருத்துவக் குழுவினா் யானையின் உடலை அதே இடத்தில் உடற்கூராய்வு செய்தனா். இதில், குடற்புழு நோய் தாக்கி யானை உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து யானையின் உடல் அதே இடத்தில் பிற விலங்குகளுக்கு உணவாக விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com