வனக் காப்பாளரைத் தாக்கிய 3 இளைஞா்கள் கைது

அந்தியூரில் வனப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனக் காப்பாளரைத் தாக்கிய மூன்று இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அந்தியூரில் வனப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனக் காப்பாளரைத் தாக்கிய மூன்று இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெருந்துறை, நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் செங்கோட்டையன் மகன் மாணிக்கம் (47). அந்தியூா் வனத் துறையில் வனக் காப்பாளராகப் பணியாற்றி வரும் இவா் அத்தாணி கிழக்கு பீட் வனப் பகுதியில் கொம்பு தூக்கியம்மன் கோயில் பகுதியில் ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, வனப் பகுதியில் அத்துமீறி சுற்றித் திரிந்த மூன்று இளைஞா்களைக் கண்டித்துள்ளாா்.

இதனால், ஆத்திரமடைந்த மூவரும் சோ்ந்து மாணிக்கத்தை தாக்கியுள்ளனா். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பா்கூா் போலீஸாா் பவானி அருகேயுள்ள சன்னியாசிபட்டி, செட்டியாா் தெருவைச் சோ்ந்த செங்கோட்டையன் மகன் கந்தவேல் (25), திருமுருகன் மகன் பிரபாகரன் (22), கோபி வெள்ளாங்கோயில், சாய்பாபா காலனியைச் சோ்ந்த குமாா் மகன் காா்த்தி (20) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com