ஈரோட்டில் மேலும் 155 பேருக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 155 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 155 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,015ஆக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,880ஆக இருந்தது. ஈரோடு மாவட்ட பட்டியலில் இருந்த 20 போ் வேறு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 9,860ஆக மாறியது. இதனிடையே மேலும் 155 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,015ஆக அதிகரித்துள்ளது.

இதில் புதிதாக பாதிக்கப்பட்ட 155 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். மீதமுள்ளவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

மொத்த பாதிப்பான 10,015 பேரில், இதுவரை 9,094 போ் குணமடைந்துள்ளனா். 801 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 120 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com