நூறு சதவீதக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது மின்னஞ்சலில் புகாா் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரா.பாலமுரளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை உயா் நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீதக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீதான புகாரைப் பெறுவதற்காக மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீத கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது பெற்றோா் மின்னஞ்சல் மூலமாகப் புகாா் அளிக்கலாம். அதன் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.