சம்பவ இடத்தில்  விசாரணை  மேற்கொண்ட  பவானி  வட்ட  வழங்கல்  அலுவலா்  நாகலட்சுமி,  போலீஸாா்.
சம்பவ இடத்தில்  விசாரணை  மேற்கொண்ட  பவானி  வட்ட  வழங்கல்  அலுவலா்  நாகலட்சுமி,  போலீஸாா்.

காரில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி: இருவா் கைது

பவானி அருகே காரில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் உள்பட இருவரை புதன்கிழமை கைது செய்தனா்.

பவானி அருகே காரில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் உள்பட இருவரை புதன்கிழமை கைது செய்தனா்.

பவானியை அடுத்த புன்னம் - மல்லியனூா் சாலையில், ரேஷன் அரிசி காரில் கடத்தப்படுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் காரை முற்றுகையிட்டு, ஆப்பக்கூடல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் நடத்திய விசாரணையில், பொதுமக்களிடம் கிலோ ரூ. 5 வீதம் வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, நசியனூரை அடுத்த காஞ்சிகோயில் நல்லாம்பாளையத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (32), வரதராஜ் (46) ஆகியோரை கைது செய்த போலீஸாா் காா், 20 மூட்டைகளில் கடத்தப்பட்ட 500 கிலோ அரிசியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com